ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்
ஓங்காரக்குடில் Ongarakudil ஆசான் வள்ளலாரின் அருள்நிறை வாக்கு "ஜீவதயவே ஞானவீட்டின் திறவுகோல்". அன்பின் முதிர்ச்சிதான் ஞானமாக மாறும். ஆகவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள். இதுதான் ஞானத்தின் வழிகோல் என்கிறார் ஓங்காரக்குடிலாசன் சிவராஜயோகி, பரமானந்த, சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள். ஒருவன் கடவுள்தன்மை அடையவேண்டுமாயின் அவரைச் சார்ந்தவர்கள் மனம் பதறும்படியாகவோ, அஞ்சும்படியாக நடக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் கணவன் வெளியில் சென்றால் மன ைவி எப்போது திரும்பி வருவார் என நினைக்க வேண்டும். பிள்ளைகள் தகப்பனை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து மனைவி, பிள்ளைகள் பாவி வந்திட்டான் என்று நினைத்தால் நிச்சயம் அவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது. ஆகவே பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்ளவேண்டும். மனைவியும் குடும்பத்திலுள்ளோர் மனஅமைதி கெடும்படி நடக்ககூடாது. நம்மைச் சார்ந்தவர்களிடம் முதலில் அன்பு செலுத்தவேண்டும். வீட்டிலுள்ளோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளாமல், வெளியே தேனொழுக் பேசி எந்தப் பயனுமில்லை என்கிறார் ஆசான். நீங்கள் அன்பு செ